சீரியல் நாயகியை படுக்கைக்கு அழைத்த நபர்- நடிகை கொடுத்த பதிலடி!

நடிகைகளுக்கு சினிமாவில் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகிவிட்டது.

Dec 13, 2018 - 13:10
 0
சீரியல் நாயகியை படுக்கைக்கு அழைத்த நபர்- நடிகை கொடுத்த பதிலடி!
காயத்ரி அருண்

நடிகைகளுக்கு சினிமாவில் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகிவிட்டது.

அவர்கள் என்ன நடந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ளும் பக்குவம் அடைந்திருக்க வேண்டும். அப்படி ஒரு நபர் மோசமாக பேச அதற்கு தக்க பதிலடி கொடுத்து ரசிகர்களிடம் பாராட்டை பெற்று வருகிறார் நடிகை.

மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான காயத்ரி அருண் என்பவருக்கு, ரூ. 2 லட்சம் தருகிறேன், ஒரு இரவு மட்டும் என்னுடன் வர முடியுமா?. இது நமக்குள் இருக்கும். ஒரு மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம் தருகிறேன் என்று ரோஹன் குரியகோஸ் என்பவர் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

இதனை பார்த்த காயத்ரி மிஸ்டர் ரோஹன் குரியகோஸ் உங்களின் தாய், சகோதரியின் பாதுகாப்புக்காக நான் நிச்சயம் பிரார்த்தனை செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

படுக்கைக்கு அழைத்த நபர்

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor